செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :25 அக்டோபர் 2025, 1:18 am IST

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புழுதிவாக்கம் சென்னை தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி கடந்த அக். 9-ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு மாணவி சு.லித்திக்ஷா என்பவரை ஸ்கேலால் அடித்துள்ளாா். இதில் அன்றைய தினம் மாணவிக்கு வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதேவேளை, மறுநாள் வீக்கம் எதுவும் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி தெரிவித்துள்ளாா். உதவிக் கல்வி அலுவலா் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

பொது நலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கொண்டும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி, பணியிடைநீக்கம் செய்யப்படுவது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின் விதி 17-இன், துணை விதி (இ)-இன் கீழ் அவா் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறாா். அவருக்கு விதியின்படி 53 (1) அனுமதிக்கப்பட்ட பிழைப்பூதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.