மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :24 அக்டோபர் 2025, 7:48 pm

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புழுதிவாக்கம் சென்னை தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி கடந்த அக். 9-ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு மாணவி சு.லித்திக்ஷா என்பவரை ஸ்கேலால் அடித்துள்ளாா். இதில் அன்றைய தினம் மாணவிக்கு வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதேவேளை, மறுநாள் வீக்கம் எதுவும் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி தெரிவித்துள்ளாா். உதவிக் கல்வி அலுவலா் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

பொது நலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கொண்டும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி, பணியிடைநீக்கம் செய்யப்படுவது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின் விதி 17-இன், துணை விதி (இ)-இன் கீழ் அவா் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறாா். அவருக்கு விதியின்படி 53 (1) அனுமதிக்கப்பட்ட பிழைப்பூதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.