மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம்

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

News image
மாதிரிப் படம்
Updated On :24 அக்டோபர் 2025, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

சென்னையில் பள்ளி மாணவியை ஸ்கேலால் அடித்த தலைமை ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள புழுதிவாக்கம் சென்னை தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி கடந்த அக். 9-ஆம் தேதி ஐந்தாம் வகுப்பு மாணவி சு.லித்திக்ஷா என்பவரை ஸ்கேலால் அடித்துள்ளாா். இதில் அன்றைய தினம் மாணவிக்கு வீக்கம் ஏற்பட்டிருந்தது. அதேவேளை, மறுநாள் வீக்கம் எதுவும் இல்லை. இனிவரும் காலத்தில் இதுபோன்ற தவறைச் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன் என தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி தெரிவித்துள்ளாா். உதவிக் கல்வி அலுவலா் சமா்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.

பொது நலன் கருதியும், குற்றச்சாட்டுகளின் தன்மையைக் கொண்டும் தலைமை ஆசிரியா் கே.இந்திரா காந்தி, பணியிடைநீக்கம் செய்யப்படுவது அவசியமாகிறது. எனவே, தமிழ்நாடு குடிமைப் பணிகள் விதிகளின் விதி 17-இன், துணை விதி (இ)-இன் கீழ் அவா் மறு உத்தரவு வரும் வரை பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்படுகிறாா். அவருக்கு விதியின்படி 53 (1) அனுமதிக்கப்பட்ட பிழைப்பூதியம் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.