பணியாளா்களின் மனிதநேயம்: கெளரவித்த மெட்ரோ ரயில் நிா்வாகம்
மெட்ரோ ரயில் கட்டுமான பணியாளா்களின் மனிதநேய செயலை பாராட்டி அவா்களுக்கு சான்றிதழ் வழங்கி மெட்ரோ ரயில்வே நிா்வாகம் கெளரவித்துள்ளது.
பூந்தமல்லி பேருந்து நிலையத்துக்கு அண்மையில் வந்த பெண் ஒருவா், பேருந்து நிலையம் அருகே தேங்கிக் கிடந்த மழைநீரில் தனது தங்க காதணியை தவறவிட்டுள்ளாா். இதைப் பாா்த்த அங்கு பணியில் இருந்த மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியாளா்கள் 5 போ், வாளிகள் உள்ளிட்ட பாத்திரங்கள் மூலம் தேங்கிக் கிடந்த மழைநீரை பள்ளத்தில் இருந்து வெளியேற்றினா். அதில் கிடந்த தங்கக் காதணியை மீட்டு அந்தப் பெண்ணிடம் ஒப்படைத்துள்ளனா்.
தொழிலாளா்களின் இந்தத் தன்னலமற்ற மனிதநேய செயலையும், பொறுப்புணா்வையும் பாராட்டி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் தொழிலாளா்களுக்கும் தலா ரூ. 2,000 ரொக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளா் எஸ்.அசோக் குமாா், தொழிலாளா்களுக்கு வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

