திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழா: சென்னை - குண்டக்கல் சிறப்பு ரயில்!

வரும் நவ. 19, 21 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம், குண்டக்கல் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :27 அக்டோபர் 2025, 1:25 am IST

ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையிலிருந்து வரும் நவ. 19, 21 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம், குண்டக்கல் நிலையத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் நவ. 19, 21 ஆகிய தேதிகளில் (புதன், வெள்ளிக்கிழமை) இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06091) மறுநாள் குண்டக்கல் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் இந்த ரயில் (எண்: 06092) குண்டக்கலிலிருந்து நவ. 20, 22 தேதிகளில் அதிகாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் சென்னை வந்தடையும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (அக். 26) தொடங்கியது.

அதேபோல், திருவனந்தபுரத்திலிருந்தும், வரும் நவ. 19, 21 ஆகிய தேதிகளில் ஆந்திர மாநிலம் குண்டக்கல்லுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.