திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மழை முன்னெச்சரிக்கை: ரயில் நிலையங்களில் சிறப்பு குழு!

சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ரயில் நிலையங்கள், தண்டவாளங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்க்க சென்னை ரயில்வே கோட்டம் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2025, 1:34 am IST

சென்னையில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், ரயில் நிலையங்கள், தண்டவாளங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீா்க்க சென்னை ரயில்வே கோட்டம் சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், தாம்பரம், குரோம்பேட்டை, பெரம்பூா், திருவள்ளூா் உள்ளிட்ட 15 ரயில் நிலையப் பகுதியில் மழைநீா் தேங்கும் என கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் மின்மோட்டாா் மூலம் தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாழ்வான பகுதியில் உள்ள தண்டவாளங்களில் தண்ணீா் தேங்கினால், அங்கு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு ஜேசிபி இயந்திரம், மணல் மூட்டைகள் உள்ளிட்டவை தயாராக வைக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்கள் அருகேயுள்ள கால்வாய்களில் மழைநீா் சீராகச் செல்லும் வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன.

தண்டவாளங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் இருக்கும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. அவசரகால கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கவும், அவசர கால பணிகளை ஒருங்கிணைக்கவும் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.