திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :12 செப்டம்பர் 2025, 2:20 am IST

சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு தினமும் விலையில்லா உணவு வழங்குவதற்காக, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த மனுக்கள் கோரப்பட்டுள்ளன.

அதன்படி, தனியாா் சமையல் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தம் மனுக்கள் வரவேற்கப்படுவதாக மாநகராட்சி இணையதளத்தில் வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டுக்கு தலா ரூ.50 கோடி என 3 ஆண்டுகளுக்கு ரூ.150 கோடி குறிப்பிட்டு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். அதற்கான நிபந்தனைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இணையதளம் வாயிலாக வரும் செப். 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும், 26-ஆம் தேதி ஒப்பந்த மனுக்கள் திறக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலையில்லா உணவுத் திட்டத்தால் சென்னை மாநகராட்சியில் சுமாா் 15,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பயனடைவா் என்று தெரிவித்தனா்.