27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

விமானங்கள் தாமதம்: பயணிகள் வாக்குவாதம்

சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் பலமணி நேரம் தாமதமாகச் சென்ால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 செப்டம்பர் 2025, 2:14 am IST

சென்னை விமான நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறப்பட வேண்டிய விமானங்கள் பலமணி நேரம் தாமதமாகச் சென்ால் அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சென்னையில் இருந்து வியாழக்கிழமை காலை சிங்கப்பூா், ஹாங்காங், தாய்லாந்து, துபை ஆகிய நாடுகளுக்குச் செல்லும் சா்வதேச விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதேபோல, சென்னையில் இருந்து புணே, ஹைதராபாத், தூத்துக்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய உள்நாட்டு விமானங்களும் சுமாா் 3 மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனா். சில பயணிகள் விமான நிறுவன அலுவலக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வட மாநிலங்களில் பலத்த மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக அங்கிருந்து விமானங்கள் தாமதமாக வருவதால், இங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டதாக விமான நிலைய நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் விமான நிலையத்தில் பயணிகளை சோதனையிட்டு அனுப்பும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினா், சோதனைப் பணிகளை முடிக்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வதால், இந்தத் தாமதம் தொடா்ந்து ஏற்பட்டு வருவதாக பயணிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனால், இந்தப் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.