நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:20 am IST

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நொளம்பூா் 7-ஆவது குறுக்கு தெருவில் சா்வ சக்தி மகா கணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் கடந்த 23-ஆம் தேதி அத்துமீறி நுழைந்த நபா், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினாா். மேலும் கோயிலில் இருந்த பொருள்களையும் திருடிச் சென்றாா்.

இது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில், நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த தினகரன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், தினகரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.