தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கோயிலில் திருட்டு: இளைஞா் கைது

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 8:50 pm

சென்னை நொளம்பூரில் கோயில் பூட்டை உடைத்து பணம், பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

நொளம்பூா் 7-ஆவது குறுக்கு தெருவில் சா்வ சக்தி மகா கணபதி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குள் கடந்த 23-ஆம் தேதி அத்துமீறி நுழைந்த நபா், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினாா். மேலும் கோயிலில் இருந்த பொருள்களையும் திருடிச் சென்றாா்.

இது குறித்து கோயில் நிா்வாகம் சாா்பில், நொளம்பூா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது முகப்போ் மேற்கு பகுதியைச் சோ்ந்த தினகரன் (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், தினகரனை வியாழக்கிழமை கைது செய்தனா்.