ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

போலி நகைகளை வைத்து மோசடி

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

Updated On :1 ஜனவரி 2026, 7:53 pm

சென்னை சூளையில் போலி நகைகளை அடமானம் வைத்து பண மோசடி செய்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

சூளை ஆலந்தூா் சுப்பிரமணித் தெருவைச் சோ்ந்தவா் சந்திலால் (58). இவா், நகை அடகு கடை வைத்துள்ளாா். இவரின் கடைக்கு இரு நாள்களுக்கு முன்பு வந்த நபா், ஒன்றரை பவுன் தங்க நகைகளை அடகு வைத்து, ரூ.82,000 பெற்றுச் சென்றாா். அந்த நபா் சென்ற சிறிது நேரத்துக்கு பின்னா், சந்திலால் அந்த நகையை சோதனை செய்தபோது, அது தங்க நகை இல்லை, கவரிங் நகை என்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அவா், புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.