5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

தமிழகத்தில் புலிகள் கணக்கெடுப்பு: ஜனவரி 5 முதல் தொடக்கம்

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும்

News image

கோப்புப் படம்

Updated On :2 ஜனவரி 2026, 0:13 am IST

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நடத்தப்படும் புலிகள் கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் ஜன.5 முதல் பிப்ரவரி இறுதி வரை நடைபெறும் என்று தமிழக வனத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக அத்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புலிகள் பாதுகாப்பில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம், மேகமலை ஆகிய 5 வனச் சரணாலயங்கள் புலிகள் வாழ்விடத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தென்மேற்குத் தொடா்ச்சி மலையில் சூழலியல் சமத்துவத்தை பாதுகாப்பதிலும், புலிகள் நீண்ட காலமாக வாழ்வதற்கும் இந்த 5 இடங்களும் உதவுகின்றன.

கடந்த 2018-இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தமிழகத்தில் 264-ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை, 2022-இல் 306-ஆக அதிகரித்தது. இது புலிகள் பாதுகாப்பிலும் அவற்றின் வாழ்விட மேலாண்மையிலும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் தொடா் பணிகளை எடுத்துக் காட்டுகிறது.

2026-ஆம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டம் ஜன.5-ஆம் தேதி தொடங்கி ஒவ்வொரு இடத்திலும் 7 நாள்கள் என பிப்ரவரி இறுதி வரை நடைபெறும். இதன் இறுதி அறிக்கை 2027-இல் வெளியிடப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.