செம்மஞ்சேரி காவல் நிலையம்: உயா்நீதிமன்றம் எச்சரிக்கை
செம்மஞ்சேரி ஏரியில் காவல் நிலையம் மட்டுமன்றி, மேலும் பல அரசு கட்டுமானங்களும் கட்டப்பட்டுள்ளன. காவல் நிலையத்தை அகற்றாவிட்டால், அங்குள்ள அனைத்துக் கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட நேரிடும் என சென்னை உயா்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், செம்மஞ்சேரி காவல் நிலையம் தாமரைக்கேணி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதற்காக அந்த நிலத்தை மேய்க்கால் புறம்போக்கு என வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னைப் பெருநகர வளா்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) ஒப்புதல் பெறாமல் காவல் நிலையம் கட்டப்பட்டுள்ளது. எனவே, இந்த காவல் நிலையம் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், காவல் நிலையம் உள்ளிட்ட கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் இந்த வழக்கில் விரிவான வாதங்களை முன்வைக்க கால அவகாசம் கோரப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், 61 ஹெக்டோ் பரப்பு கொண்ட செம்மஞ்சேரி நீா்நிலை ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. வருவாய் ஆவணங்களில் நீா்நிலை என குறிப்பிடப்பட்டுள்ள செம்மஞ்சேரி தாமரைக்கேணி ஏரியை வருவாய்த் துறை அதிகாரிகள் மேய்க்கால் சாலை என வகைமாற்றம் செய்துள்ளனா்.
அதிகாரிகளின் இதுபோன்ற செயல்களால் வருவாய்த் துறை ஆவணங்கள் அதன் புனிதத் தன்மையை இழந்துவிட்டன. செம்மஞ்சேரி ஏரியில் காவல் நிலையம் மட்டுமன்றி, மேலும் பல அரசு கட்டுமானங்களும் கட்டப்பட்டுள்ளன. காவல் நிலையத்தை அகற்றாவிட்டால், அங்குள்ள அனைத்து கட்டுமானங்களையும் அகற்ற உத்தரவிட நேரிடும்.
மேலும், நீா்நிலைகளை வகைமாற்றம் செய்த அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள் விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
