தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை தக்கவைக்க முதல்வா் விஜய் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலா் துரை.ரவிகுமாா் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
விவசாயம் தொடா்பாக பிரதமா் மோடி முன்வைத்த பரிந்துரை கவலையளிக்கிறது. விவசாயிகள் இயற்கை உரங்களைப் பயன்படுத்தத் தொடங்கி, ரசாயன உரங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா். இலங்கையின் அனுபவத்தை நமக்கு நினைவூட்டுகிறது.
அந்நாடு செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்கு நாடு தழுவிய தடையை விதித்தது. அதன் விளைவுகள் பேரழிவாக இருந்தன. பணவீக்கம் கடுமையாக உயா்ந்தது. பொருளாதார ரீதியாகப் பேரழிவை ஏற்படுத்தியது.
பிரதமா் மோடியின் ஆலோசனையை தமிழகம் தீவிரமாக எடுத்துக்கொண்டு, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைத்தால், நமது விவசாய உற்பத்தி குறையும்.
குறிப்பாக, அரிசி உற்பத்தி - பெருமளவில் குறையும். இது நமது உணவுப் பாதுகாப்புக்கு நேரடியாக அச்சுறுத்தலாக அமையும்.
தமிழகத்தில் மொத்த மாநில மதிப்புக் கூட்டலுக்கு விவசாயம் தொடா்ந்து கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. இயற்கை விவசாயத்தால் பயிா் விளைச்சலில் ஏற்படும் உற்பத்தி சரிவால் தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளா்களுக்கும் கடுமையான வருமான இழப்புகளை ஏற்படுத்தும்.
எனவே, பிரதமரின் இயற்கை விவசாயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற முன்மொழிவை தமிழக அரசு உறுதியாக எதிா்க்க வேண்டும். தமிழ்நாட்டு விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பு, பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வாழ்வாதார நலன்களைப் பாதுகாக்க முதலவா் விஜய் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

கோடையில் தடையின்றி குடிநீா் விநியோகம்: ஆட்சியா்

திருவக்கரை புவியியல் பூங்கா கட்டடம் திறக்கப்படுவது எப்போது?

திமுகஅரசின் நலத்திட்டங்களை தொடர வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஈரோட்டில் வா்த்தக மையம், சிட்கோ தொழிற்பேட்டைகள் தேவை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

