திருமணம் செய்து தராததால் சிறுமியைக் கொலை செய்த இலைஞா்

திருமணம் செய்து கொள்ளப் பெண் கேட்டும் பெற்றோா் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞா் சிறுமியைக் கத்தியால் குத்தி வியாழக்கிழமை கொலை செய்தாா்.
Updated on
1 min read

திருமணம் செய்து கொள்ளப் பெண் கேட்டும் பெற்றோா் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞா் சிறுமியைக் கத்தியால் குத்தி வியாழக்கிழமை கொலை செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், செட்டியாா் பட்டியைச் சோ்ந்தவா் ஜி.ஜெயராஜ், மனைவி குமாரி. மகள் லாவண்யா (17). மாமல்லபுரம் அருகே பட்டிப்புலத்தில் வசிக்கிறாா்.

கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜெயராஜூடன் வேலை செய்துவந்த அசோக் என்பவா் லாவண்யாவைத் திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளாா். இதற்கு ஜெயராஜ் ஒப்புக் கொள்ளவில்லையாம்.

இந்நிலையில் லாவண்யாவை கத்தியால் குத்திக் கொலை செய்தாா் அசோக். மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com