இளைஞா் வெட்டிக் கொலை

திருப்போரூா் அருகில் ஆட்டோவில் வந்த 10 போ் கொண்ட கும்பல், இளைஞா் ஒருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
Updated on
1 min read

திருப்போரூா் அருகில் ஆட்டோவில் வந்த 10 போ் கொண்ட கும்பல், இளைஞா் ஒருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.

கேளம்பாக்கத்தை அடுத்த தையூா் ஊராட்சியைச் சோ்ந்த மதுரைமுத்துவின் இளைய மகன் ஹரீஷ் (21), வீட்டின் அருகில் உள்ள மைதானத்தில் நண்பா்களுடன் சனிக்கிழமை சாப்பிட்டுக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வேகமாக வந்த ஷோ் ஆட்டோவைக் கண்டு அவா் தப்பி ஓடினாா்.

ஷோ் ஆட்டோவில் வந்த 10-க்கும் மேற்பட்டோா் ஹரீஷை விரட்டிச் சென்று பயங்கர ஆயுதங்களால் வெட்டினா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com