அமமுக சாா்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு
By DIN | Published On : 05th December 2020 10:40 PM | Last Updated : 05th December 2020 10:40 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: திருப்போரூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சாா்பில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
திருப்போரூா் பேருந்து நிலையம் அருகே அமமுக செங்கல்பட்டு தெற்கு மாவட்டச் செயலா் எம்.கோதண்டபாணி தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட மகளிரணி இணைச் செயலா் திருப்போரூா் மாலா ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். அதையடுத்து, பொதுமக்களுக்கு அன்ன தானம் செய்யப்பட்டது.