ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு விருது

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிக்குத் தேசிய அளவில் தொழில் நிறுவனங்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தொடர்பு மிகுந்த கல்லூரி விருது வழங்கப்பட்டுள்ளது. 
Updated on
1 min read


தாம்பரம்: சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரிக்குத் தேசிய அளவில் தொழில் நிறுவனங்களுடன் மேம்பட்ட தொழில்நுட்பத்தொடர்பு மிகுந்த கல்லூரி விருது வழங்கப்பட்டுள்ளது. 

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகமும், இந்திய தொழில் சம்மேளனமும் இணைந்து ஆண்டுதோறும் சிறந்த இண்டஸ்டிரியல் இன்ஸ்டிடியூட் லிங்கேஜ் என்ற விருதை பொறியியல் கல்லூரிகளுக்கு வழங்கி வருகிறது. 

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் காணொலி மூலம் வழங்கிய விருதை சனிக்கிழமை பெற்றுக் கொண்ட சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் சாய்பிரகாஷ் லியோமுத்து செய்தியாளர்களிடம் கூறியது:

தேசிய அளவில் பொறியியல் கல்லூரிகளில் அளிக்கப்படும் கல்வி, பயிலரங்கு, தொழில் பயிற்சி, கூட்டு ஆராய்ச்சி நடவடிக்கை, தொழில் நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்களின் பயிற்சி, மாணவர்களின் புதுமைக் கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட பல்வகை நடவடிக்கைகளை கணக்கெடுப்பின் மூலம் தரவரிசைப்படுத்தி சிறந்த கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. 

கடந்த 3 வருடங்களில் ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரி தொடர்ந்து கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மின்னியல் மற்றும் மின்னணுவியல் ஆகிய துறைகள் சார்பில் சிறந்த இண்டஸ்டிரியல் இன்ஸ்டியியூட் லிங்கேஜ் விருது பெற்றுள்ள நிலையில் தற்போது இயந்திரவியல் துறைக்கு விருது வழங்கப்பட்டு இருப்பது பெருமையளிக்கிறது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com