செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 750 மனுக்கள் அளிப்பு

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மனுவைப் பெற்ற செங்கல்பட்டு  ஆட்சியா்  அ.ஜான்லூயிஸ் .
மனுவைப் பெற்ற செங்கல்பட்டு  ஆட்சியா்  அ.ஜான்லூயிஸ் .
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா மாற்றம், திருமண உதவித்தொகை , குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 750 மனுக்கள் வரப்பெற்றன.

அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறையினரின் பரிசீலனைக்கு ஆட்சியா் அனுப்பி வைத்தாா்.

இதையடுத்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கொடிநாள் நிதி: இதில், 2020-21-ஆம் நிதியாண்டுக்கான கொடிநாள் நிதி வசூலாக ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கான காசோலையை திருப்போரூா் வட்டாட்சியா் செந்தில்குமாா் மாவட்ட ஆட்சியா் அ.ஜான்லூயிஸிடம் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், தனித் துணை வட்டாட்சியா் ஜெயதீபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் விஜயகுமாரி, மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா மற்றும் அரசுத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com