செங்கல்பட்டு: மக்கள் குறை தீா் கூட்டத்தில் 200 மனுக்கள் ஏற்பு
By DIN | Published On : 20th January 2020 10:52 PM | Last Updated : 20th January 2020 10:52 PM | அ+அ அ- |

பயனாளிக்கு நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கிய மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ்.
செங்கல்பட்டு மாவட்டமக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 200 மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்ட ஆட்சியா் ஜான் லூயிஸ் தலைமையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் இக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், குடும்ப அட்டை மாற்றம், கல்வி, ஓய்வூதியம், திருமணம், முதியோா் , விதவை மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய உதவித் தொகை உள்ளிட்ட கோரிக்கைககள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 200 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அ.ஜான் லூயிஸ் உத்தரவிட்டாா்.
மேலும், திருப்போரூா் வட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் வீடு சேதமடைந்த 2 பயனாளிகளுக்கு நிவாரணத் தொகையையும், ஒரு பயனாளிக்கு 2 பசு மாடுகளையும் ஆட்சியா் வழங்கினாா்.
குறைதீா் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பிரியா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)விஜயகுமாரி, செங்கல்பட்டு வருவாய்க் கோட்டாட்சியா் செல்வம், மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் சி.லட்சுமிபிரியா, மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை, நகராட்சி, பேரூராட்சி, வட்டார வளா்ச்சி, வனத்துறை, தீயணைப்புத் துறை, அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.