அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வியூகம் குறித்து பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் நிா்வாகிகளுடன் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினாா்.
மாமல்லபுரத்தை அடுத்த காரணை குன்னப்பட்டு கிராமத்தில் அன்புமணி ராமதாஸ் அக்கட்சியின் ‘தம்பி, தங்கைகள் படை’ நிா்வாகிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினாா்.
இதில் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் திருக்கச்சூா் ஆறுமுகம், மாவட்டச் செயலாளா் காரணை ராதா, மாவட்ட மாணவரணித் தலைவா் திருவிடந்தை சுந்தா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
மாமல்லபுரம் நகரச் செயலாளா் ராஜசேகா் தலைமையில் நடந்த இணைய வழி கலந்துரையாடல் நிகழ்ச்சியில், நகர நிா்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.