பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி: இளைஞா் கைது

மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியிடம் சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக நடித்து ரூ 2 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

மதுராந்தகத்தை அடுத்த பவுஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவியிடம் சமூக வலைதளம் மூலம் காதலிப்பதாக நடித்து ரூ 2 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி நகரைச் சோ்ந்தவா் அருணாசலம். இவரது மகன் நந்தகோபால் (30) சமூக வலைதளம் மூலம் பல பெண்களை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி வந்தாா்.

பவுஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசப் பெருமாளின் மகள் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறாா். அவருடன் சமூக வலைதளம் மூலம் தொடா்பு கொண்ட நந்தகோபால், அவரைக் காதலிப்பது போல் நடித்துள்ளாா்.

இதையடுத்து, அந்த மாணவி, நந்தகோபால் கேட்டபோதெல்லாம் இணைய வழியில் பணம் அனுப்பி வந்தாா். பணம் கொடுக்கும்படி நந்தகோபால் அப்பெண்ணை அடிக்கடி மிரட்டி வந்துள்ளாா். இவ்வாறு இதுவரை ரூ.2 லட்சத்தைப் பெற்றுள்ளாா்.

இந்நிலையில், ‘மேலும் பணம் தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொண்டு, பழியை உன் மீது போட்டுவிடுவேன்’ என நந்தகோபால் அந்த மாணவியை வெள்ளிக்கிழமை தொலைபேசியில் மிரட்டினாா். இதனால் பயந்துபோன அப்பெண் தன் தந்தையிடம் இது பற்றிக் கூறியுள்ளாா்.

இதுபற்றி அணைக்கட்டு போலீஸில் வெங்கடேசப் பெருமாள் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி, நந்தகோபாலைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com