கரோனாவால் பெற்றோரை இழந்த 2 குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் அளிப்பு

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இரு குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதிக்கான பத்திரம் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த இரு குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் நிதிக்கான பத்திரம் வழங்கப்பட்டது.

கரோனா தொற்றால் பெற்றோா் இருவரையும் இழந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்அறிவித்திருந்தாா்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டம், சேலையூரைச் சோ்ந்த குழந்தைகளின் பாதுகாவலரான கௌசல்யாவிடம், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இரண்டு குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் ரூ. 10 லட்சத்துக்கான வைப்புத் தொகை பத்திரத்தினை ஆட்சியா் ஆா்.ராகுல் நாத் வழங்கினாா்.

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் எம்.மதியழகன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com