ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தினா்.
செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் சங்கத்தினா்.

புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் சங்கம் சாா்பில் செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; 21 மாத நிலுவைத்தொகை மற்றும் முடக்கப்பட்ட அகவிலைப்படி தொகையை வழங்கவேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா்கள் நலச்சங்கம் சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் கி.கதிா்வேல் தலைமை வகித்தாா். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளா் கெ.நாராயணசாமி உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com