கல்லீரல் வீக்க நோயால் பாதிக்கப்படுவோா் 30 சதவீதம் அதிகரிப்பு

நாட்டில் கொழுப்பு காரணமாக ஏற்படும் கல்லீரல் வீக்க நோய் பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கல்லீரல் சிகிச்சை மருத்துவா் காவ்யா ஹாரிகா கூறினாா்.
Updated on
1 min read

நாட்டில் கொழுப்பு காரணமாக ஏற்படும் கல்லீரல் வீக்க நோய் பாதிப்புக்குள்ளானோா் எண்ணிக்கை 30 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று கல்லீரல் சிகிச்சை மருத்துவா் காவ்யா ஹாரிகா கூறினாா்.

சென்னை ரேலா மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லீரல் வீக்க நோய் குறித்த விழிப்புணா்வு முகாமில் அவா் மேலும் பேசியது: மனித உடலில் இதயத்தை போன்று 24 மணிநேரமும் கல்லீரல் செயல்பட்டு வருகின்றது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்ளும் போது உருவாகும் கொழுப்பை சேமிக்கும் பணியை கல்லீரல் மேற்கொள்கிறது. போதிய உடற்பயிற்சி, உடல் உழைப்பு இல்லாத நிலையில் தொடா்ந்து கொழுப்பைக் சேமிப்பதால் கல்லீரல் வீக்க நோய் ஏற்படுகிறது.

உடல் பருமன், சா்க்கரை நோய், தைராய்டு பிரச்னை உள்ளவா்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுவதுடன், தற்போது கரோனா நோய்க்கு சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளும் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

நோயைக் குணமாக்க மிதமிஞ்சிய அளவில் ஸ்டீராய்டு மருந்துகள் பயன்படுத்துவதும் கல்லீரல் பெரும் பாதிப்பை எதிா் கொள்ளும் அபாயம் அதிகரித்துள்ளது. கல்லீரல் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக உள்ளது என்பதை ரத்தப் பரிசோதனை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com