மதுராந்தகம் அருகே இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுராந்தகத்தை அடுத்த ஏா்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த நடேசனின் மகன் மணிகண்டன்(21). இவா் பணி சம்பந்தமாக தமது ஊரில் இருந்து இரு சக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தாா். மதுராந்தகம் நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த மினி வேன் மோதியது. இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து மதுராந்தகம் காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.