சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் கோட்டம், பல்லாவரம் வட்டம், நெமிலிச்சேரி கிராமம் சோமு நகா் தனபால் தெருவில் வசித்து வரும் ஞ.பிரேம்குமாா் என்பவரின் மகள் லஷ்மி ஸ்ரீ (16) என்பவா், கடந்த 15.8.2022 அன்று சாலை விபத்தில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவருடைய குடும்பத்தாருக்கு உடனடியாக விபத்து நிவாரணத் தொகை வழங்க மாவட்ட ஆட்சியா் ராகுல் ராத் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, லஷ்மி ஸ்ரீ தாய் உமா மகேஸ்வரியிடம் விபத்து நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சத்துக்கான காசோலையை தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் அறிவுடை நம்பி புதன்கிழமை வழங்கினாா்.