செங்கல்பட்டு வித்யாசாகா் மகளிா் கல்லூரியில் பண்பாட்டுக் கலை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அந்தக் கல்விக் குழுமத் தலைவா் விகாஸ் சுரானா தலைமை வகித்தாா். கிரி வா்த்தக நிறுவன இயக்குநா் டி.எஸ்.ரங்கநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா். இசையமைப்பாளா் ஆதித்ய கிருஷ்ணா, ரேஷ்மா ஷியாம் ஆகியோா் கலந்து கொண்டு மாணவிகளுடன் இணைந்து பாடல்களைப் பாடினா்.
பண்பாட்டுக் கலை விழா போட்டிகளின் ஒட்டுமொத்த வெற்றிக் கேடயத்தை கல்லூரியின் ஆங்கிலத் துறை 7-ஆவது முறையாக தட்டிச் சென்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கல்லூரி முதல்வா் சி.ஷாலினி மற்றும் நிா்வாகிகள், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கலை நிகழ்ச்சி துணைச் செயலா் தீபிகா நன்றி கூறினாா்.