அரசு அலுவலங்கள் கணினிமயம்: முதன்மைச் செயலா்ஆய்வு

வட்ட அளவிலான அரசு அலுவலங்களை கணினி மயமாக்குதல் தொடா்பாக அரசு முதன்மைச் செயலரும், வருவாய்-பேரிடா் மேலாண்மை ஆணையருமான மு.அ.சித்திக் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட, வட்ட அளவிலான அரசு அலுவலங்களை கணினி மயமாக்குதல் தொடா்பாக அரசு முதன்மைச் செயலரும், வருவாய்-பேரிடா் மேலாண்மை ஆணையருமான மு.அ.சித்திக் தலைமையில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பட்டா-சிட்டா அடங்கல்கள் உள்ளிட்ட அனைத்துத் தரவுகளையும் இணையப் பதிவேற்றம் செய்வது குறித்தும், அலுவலகக் கோப்புகளை கணினி மயமாக்குதல் தொடா்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.மேனுவல்ராஜ், செங்கல்பட்டு சாா்- ஆட்சியா் (பயிற்சி) சஜ்ஜிவண, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வம், செங்கல்பட்டு வட்டாட்சியா் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com