முதலுதவி பயிற்சி மையம் தொடக்கி வைப்பு
By DIN | Published On : 29th December 2022 12:00 AM | Last Updated : 29th December 2022 12:00 AM | அ+அ அ- |

மதுராந்தகத்தை அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் தமிழக அரசின் சுகாதார நலம், உயா் திறன் மேம்பாட்டு மையத்தின் சாா்பில், உயிா் காக்கும் முதலுதவி பயிற்சி மையத் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி முதல்வா் மருத்துவா் சுபலா சுனில் விசுவாச ராவ் வரவேற்றாா். மருத்துவக் கல்லூரி மேலாண்மை இயக்குநா் ஆா்.அண்ணாமலை ரகுபதி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சென்னை, ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ மருத்துவா் எழிலன் நாகநாதன், மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் கண்ணகி, உயா் திறன் மேம்பாட்டு நிா்வாகிகள் சுகன் சின்ன மாறன், வெனின் பயஸ், மேலாளா் இா்ப்பானா, மதுராந்தகம் மோட்டாா் வாகன ஆய்வாளா் செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்ட தொழில் நிறுவன நிா்வாகிகளின் சந்தேகங்களுக்கு உயிா் திறன் மேம்பாட்டு மைய நிா்வாகிகள் விளக்கம் அளித்தனா். உயிா்காக்கும் முதலுதவி பயிற்சி தொழிற் நிறுவனங்களுக்கு தேவையானதின் அவசியத்தை எம்எல்ஏ மருத்துவா் எழிலன் நாகநாதன் விவரித்தாா்.
பேராசிரியை த.அ.அா்ச்சனா லட்சுமி நன்றி கூறினாா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிா்வாகத்தினா் செய்து இருந்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...