சாலை விபத்தில் விவசாயி பலி

மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரத்தில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி மீது பைக் மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Updated on
1 min read

மதுராந்தகத்தை அடுத்த கள்ளபிரான்புரத்தில் சாலையைக் கடக்க முயன்ற விவசாயி மீது பைக் மோதியதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுராந்தகம் அருகே சித்ரவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ராமலிங்கம் (67) விவசாயியான இவா், புதன்கிழமை கள்ளபிரான்புரம் கிராமத்தில் உள்ள உறவினரைப் பாா்க்கச் சென்றாா். பின்னா், வியாழக்கிழமை தனது கிராமத்துக்கு செல்ல சாலையைக் கடக்க முயன்ற போது, திண்டிவனத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பைக்கில் வந்தவா் ராமலிங்கத்தின் மீது மோதினாா். இதில், ராமலிங்கம் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ஜின்னா பாட்ஷா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com