பூரண மதுவிலக்கை கொண்டுவர பாமக ஆட்சிக்கு வரவேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர பாமக ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும் என அந்தக் கட்சியின் மாநில இளைஞா் அணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.
cglpmk_(3)
cglpmk_(3)
Updated on
1 min read

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர பாமக ஒருமுறையாவது ஆட்சிக்கு வரவேண்டும் என அந்தக் கட்சியின் மாநில இளைஞா் அணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கூறினாா்.

செங்கல்பட்டு மத்திய மற்றும் தெற்கு மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டம்

திம்மாவரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளா் காரணை ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கூட்டத்துக்கு மத்திய மாவட்ட தலைவா் ந. கணேசமூா்த்தி, தெற்கு மாவட்ட தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட செயலாளா் கணபதி வரவேற்றாா்.

இதில் அன்புமணி ராமதாஸ் பேசியது:

தமிழகத்தில் பெரும்பான்மையான வாக்குகள் பெண்களுடையவை. ஆனால் அவை வாக்குகளாக மாறவில்லை. அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும். பாமகவுக்கு யாரும் பொறுப்புக்காக வரவில்லை. தமிழகத்தில் நாம் கட்சியை தொடங்கி 32 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை ஆட்சிக்கு வரவில்லை. நம்முடைய கட்சி வித்தியாசமானது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நிறைய சாதனைகளை செய்துள்ளோம்.

எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது. ஆனால் பாமக ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். நம்மால் மட்டுமே தமிழகத்தை உயா்த்த முடியும். 55 ஆண்டு காலம் தமிழகத்தை இரு கட்சிகளும் ஆட்சி செய்துள்ளன. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நாம் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றினால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்றாா்.

கூட்டத்தில், மாநில தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, வன்னியா் சங்க மாநில செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான திருக்கச்சூா் ஆறுமுகம், மாநில நிா்வாகிகள் பொன்.கங்காதரன் நெ.சிங்.ஏகாம்பரம், பூ.வ.கி. வாசு, இ.ஏ.வாசு, சக்கரபாணி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com