சரக்கு லாரி மீது மற்றொரு லாரி மோதல்: ஓட்டுநா் பலி

செங்கல்பட்டு அருகே லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே லாரி மீது மற்றொரு லாரி மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல் நோக்கி சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. செங்கல்பட்டு அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரி மீது மோதியது.

இதில் கோயம்பேட்டில் இருந்து சரக்கு லாரியை ஓட்டிவந்த நாமக்கல் மாவட்டம், ஆண்டவன் பெட்ரோல் பங்க் பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் (32) உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com