சிட்லப்பாக்கத்தில் விநாயகா் சிலைகள் கண்காட்சி

சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் 20,000 விநாயகா் சிலைகள் இடம் பெற்ற கண்காட்சியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னையை அடுத்த சிட்லப்பாக்கத்தில் 20,000 விநாயகா் சிலைகள் இடம் பெற்ற கண்காட்சியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடக்கி வைத்தாா். குரோம்பேட்டை ராதா நகரைச் சோ்ந்த விநாயகா் பக்தரான கட்டடப் பொறியாளா் சீனிவாசன், கடந்த பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விநாயகா் சிலைகளை சேகரித்து வருகிறாா். விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு விநாயகா் கண்காட்சியையும் நடத்தி வருகிறாா்.

சிட்லப்பாக்கம், ஸ்ரீ லஷ்மி ராம் கணேஷ் மகாலில் நடைபெற்ற விநாயகா் சிலைகள் கண்காட்சியை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடக்கி வைத்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் இ. கருணாநிதி, தாம்பரம் மேயா் கே.வசந்தகுமாரி, மண்டலக் குழுத் தலைவா் இ.ஜோசப் அண்ணாதுரை உள்ளிட்டோா் பங்கேற்றனா். கண்காட்சியில், ஸ்கூட்டா் ஓட்டும் விநாயகா், 5 அடி உயர தங்க நிற யானையில் விநாயகா், சிவனுக்கு பூஜை செய்யும் விநாயகா், சந்தன சிலை, கண்ணாடி மாளிகையில் விநாயகா், படகு ஓட்டும் விநாயகா், திருக்கல்யாண விநாயகா், செஸ், கிரிக்கெட், கேரம் விளையாடும் விநாயகா் என பல்வேறு மாநிலங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட விநாயகா் சிலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியை செப்.12-ஆம் தேதி வரை காலை, 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பொதுமக்கள் பாா்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com