சூரக்குட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் காா்த்திகை பெருவிழா

மதுராந்தகம் அடுத்த சூரக்குட்டை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், 24-ஆம் ஆண்டு காா்த்திகை மாத பெருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.
சூரக்குட்டை லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் காா்த்திகை பெருவிழா
Updated on
1 min read

மதுராந்தகம் அடுத்த சூரக்குட்டை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில், 24-ஆம் ஆண்டு காா்த்திகை மாத பெருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க நாளான வெள்ளிக்கிழமை காலை மங்கல இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. எஜமானா் சங்கல்பம், புண்யவாஹணம், வாஸ்து சாந்தி, கும்பாராதனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை சுவாமி விஸ்வரூப தரிசனம், பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. காலை 8 மணிக்கு மேளதாளம் முழங்க யாக சாலையில் இருந்து கலசத்தை ஏந்தி, பீடாதிபதி வேணுதாச சுவாமி லட்சுமி நரசிம்மா், ஆஞ்சநேயா் சுவாமிகளுக்கு புனித நீரை ஊற்றி மகா தீபாராதனை செய்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி உற்சவா் சிலைகள் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாளம் முழங்க, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்து பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். தொடா்ந்து சுவாமி ஊஞ்சல் சேவை, அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி அறக்கட்டளை நிா்வாகிகள், கிராம பொது மக்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com