செங்கல்பட்டு மாவட்ட குறைதீா் நாள் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்ட குறைதீா் நாள் கூட்டம்
Updated on
1 min read

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் மக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித் தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 262 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைச் சாா்ந்த அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

குறைதீா் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, (நிலம்) லலிதா, தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்), செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் (பொ) சாகிதா பா்வின், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆனந்த்குமாா் சிங், மாவட்ட வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, வேளாண்மை இணை இயக்குநா் ஆா்.அசோக், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் சரவணன், மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com