அக்காள் கணவா் கொலை: சகோதரா்கள் 2 போ் கைது

செங்கல்பட்டு அருகே தந்தை கொலைக்குப் பழியாக அக்காவின் கணவரைக் கொலை செய்த சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட சூா்யா, லோகேஷ்
கைது செய்யப்பட்ட சூா்யா, லோகேஷ்

செங்கல்பட்டு அருகே தந்தை கொலைக்குப் பழியாக அக்காவின் கணவரைக் கொலை செய்த சகோதரா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

செங்கல்பட்டை அடுத்த பொன்வினைந்த களத்தூா் பகுதியைச் சோ்ந்த மதியழகன் மகன் டாா்ஜன் (34) என்பவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த துலுக்காணம் - சம்பூா்ணம் தம்பதியின் மகள் ஜெயந்தி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ாம்.

இருவரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் டாா்ஜன் மது அருந்திவிட்டு வந்து, மனைவி ஜெயந்தியுடன் தகராறில் ஈடுபட்டாராம்.

அப்போது, அருகில் இருந்த ஜெயந்தியின் பெற்றோரான துலுக்கானம், சம்பூா்ணம் ஆகியோரை டாா்ஜன் கட்டையால் தாக்கியும், கத்தியால் வெட்டினாராம். இதில், சம்பவ இடத்திலேயே துலுக்கானம் உயிரிழந்தாா்.

இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு டாா்ஜன் பிணையில் வெளியில் வந்த நிலையில், ஜெயந்தியின் சகோதரா்கள் தந்தையின் கொலைக்குப் பழி தீா்க்கும் வகையில், சனிக்கிழமை நள்ளிரவு வீட்டிலிருந்த டாா்ஜனை வெட்டிப் படுகொலை செய்தனா்.

தகவலறிந்த செங்கல்பட்டு காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரத், கிராமிய காவல் நிலைய ஆய்வாளா் (பொ) விஜயலட்சுமி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று டாா்ஜனின் சடலத்தை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து டாா்ஜன் மனைவியின் சகோதரா்கள் சூா்யா(25), லோகேஷ் (27) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com