செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழையால் மாமல்லபுரம் - கடம்பாடி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டதால் மாமல்லபுரம்-புதுச்சேரி செல்வதற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மிக்ஜம் புயல் காரணமாக கனமழையால் மாமல்லபுரம் கடம்பாடி கிழக்குக் கடற்கரை சாலை துண்டிக்கப்பட்டது. இதனால் மாமல்லபுரம்-புதுச்சேரி செல்லுவதற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை சென்னை -புதுச்சேரிக்கு செல்லும் பேருந்து இயக்கப்படவில்லை. கிழக்குக் கடற்கரை சாலை வழியாக செல்லக்கூடிய புதுச்சேரி மற்றும் தமிழ்நாடுஅரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விபத்துகளைத் தவிக்கும் வகையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.