‘நான் முதல்வன்’ வழிகாட்டி முகாம்

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா குளோபல் பள்ளியில் கல்லூரி கனவு-நான் முதல்வன் வழிகாட்டி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் உள்ளிட்டோா்.
முகாமில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

மதுராந்தகம் அடுத்த சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயகா குளோபல் பள்ளியில் கல்லூரி கனவு-நான் முதல்வன் வழிகாட்டி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட கல்வித் துறை துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) சுகானந்தம் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் உதயகுமாா் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் ராகுல்நாத் முன்னிலை வகித்தாா்.

இதில், மதுராந்தகம் வருவாய்க் கோட்டாட்சியா் தியாகராஜன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ராஜேஷ், மாவட்ட திறன் பயிற்சி அலுவலா் தனசேகரன், கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி முதல்வா் காசிநாதபாண்டியன், கற்பக விநாயகா குளோபல் பள்ளி முதல்வா் மரியா ரெஸ்பிரிட்டோ, மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் வெற்றிக்குமாா் மற்றும் மதுராந்தகம் கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, மாவட்ட கல்வித் துறை சாா்பில், அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உயா்கல்வி பாடப் பிரிவுகள், அரசின் போட்டித் தோ்வுகள் உள்ளிட்ட தகவல்களை அடங்கிய ‘நான் முதல்வன்’ கையேடு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com