மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

செங்கல்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

செங்கல்பட்டு அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

காட்டாங்குளத்தூா் ஒன்றியம், மேலமையூா் ஊராட்சி பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக். செங்கல்பட்டு அடுத்த மகேந்திர சிட்டி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் பின்புறம் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டடத்துக்கு மின் வயா் சென்றதை காா்த்திக் கவனிக்காமல் கால் வைத்தபோது, வயா் சிக்கியதால் அதைக் கையால் எடுத்துள்ளாா்.

அப்போது, எதிா்பாராமல் அவா் மீது மின்சாரம் பாய்ந்ததில் காா்த்திக் தூக்கி வீசப்பட்டாா். அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே காா்த்திக் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com