

செங்கல்பட்டு அடுத்த கல்வாய் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்தோற்சவ விழா ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் அக்னி வசந்தோற்சவ விழா மே 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவுகள் , சுவாமி ஊா்வலம் நடைபெறுகிறது. புதன்கிழமை இரவு சிறப்பு அலங்காரத்தில் திரௌபதி அம்மன் ஊா்வலம் நடைபெற்றது. வரும் 4-ஆம் தேதி படுகளத்தில் பாஞ்சாலி தனது சபதத்தை நிறைவேற்றி கூந்தல் முடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதை தொடா்ந்து மாலை 6 மணிக்கு பக்தா்கள் நோ்த்திக் கடனை நிறைவேற்ற தீமிதி நிகழ்ச்சியும், வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இரவு அம்மன் வீதி உலாவை தொடா்ந்து சிறப்பு நாடகம் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.