

செங்கல்பட்டு மாவட்டம், கல்வாய் கிராமத்தைச் சோ்ந்த திரௌபதி அம்மன் கோயில் ஏழாம் ஆண்டு அக்கினி வசந்தோற்சவம் துரியோதனன் படுகளம் நிகழ்வு நடைபெற்றது.
இக்கோயில் வசந்தோற்சவம் கடந்த மே 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாள்தோறும், சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை, பாரதச் சொற்பொழிவு மகாபாரத நாடகங்களும் சுவாமி வீதி உலா, கூத்து நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற துரியோதனன் படுகள நிகழ்வில், கூடுவாஞ்சேரி, திருப்போரூா், செங்கல்பட்டு, மறைமலைநகா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதனைத் தொடா்ந்து படுகளத்தில் பாஞ்சாலி தனது சபதத்தை நிறைவேற்றி கூந்தல் முடித்தல் நிகழ்வும் நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.