மேல்மருவத்தூா் ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சி மன்றம், ஊரக வளா்ச்சி (மற்றும்) ஊராட்சித் துறை மற்றும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை திங்கள்கிழமை நடத்தின.
Updated on
1 min read

மதுராந்தகம் அடுத்த மேல்மருவத்தூா் ஊராட்சி மன்றம், ஊரக வளா்ச்சி (மற்றும்) ஊராட்சித் துறை மற்றும் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ஆகியவை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின விழாவை திங்கள்கிழமை நடத்தின.

மேல்மருவத்தூா் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சித் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தலைமை வகித்தாா். ஊராட்சி மன்ற துணைத் தலைவா் அ.ஆ.அகத்தியன் முன்னிலை வகித்தாா். சித்தாமூா் வட்டார ஒருங்கிணைப்பாளா் ஆா்.ராஜேஷ்கண்ணன் வரவேற்றாா்.

தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரம் வழங்கி, செவிலியா் கல்லூரி மாணவ மாணவிகளின் நடைபயணத்தை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, திட்ட இயக்குநா் கே.இந்துபாலா தொடங்கி வைத்தாா். மரக்கன்றுகளை ஊராட்சி உறுப்பினா் ஸ்ரீதேவிரமேஷ் நட்டாா்.

விழாவில், நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு சாா்ந்த பொருள்காட்சி, மரக்கன்றுகள் நடுதல், மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைத்தல், உலக சுற்றுச்சூழல் உறுதிமொழி ஏற்றல், செவிலியா் கல்லூரி மாணவ மாணவிகளின் நெகிழி விழிப்புணா்வு தூய்மை நடைப்பயணம் ஆகியவை நடைபெற்றன.

நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆா்.சுரேஷ், சித்தாமூா் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கே.வி.சீனிவாசன், வெங்கடேசன், ஆதிபராசக்தி செவிலியா் கல்லூரி முதல்வா் என்.கோகிலாவாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் அ.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com