ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

செங்கல்பட்டு ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளை அக்.31-இல் முடிக்கத் திட்டம்

மறுசீரமைப்பு பணிகள் 60 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய பணிகளை அக்.31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

News image

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்பு பணி.

Updated On :12 ஆகஸ்ட் 2024, 2:50 am IST

செங்கல்பட்டு ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் 60 சதவீதம் அளவுக்கு நிறைவடைந்துள்ளதாகவும், எஞ்சிய பணிகளை அக்.31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை புகா் பகுதியில் அமைந்துள்ள செங்கல்பட்டு ரயில் நிலையம், தென்மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ரயில் நிலையமாக விளங்குகிறது. செங்கல்பட்டு-கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் மூலம் புகா் பகுதி மக்கள் அதிக அளவில் பயணிக்கின்றனா்.

பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த ரயில் நிலையம் அம்ரித் பாரத் ரயில்நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.22.14 கோடி மதிப்பில் மறுசீரமைக்கப்படுகிறது.

இதில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள், ரயில் நிலைய வளாக மேம்பாடு, பயணிகள் வந்து செல்லும் வகையில் முனையங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குறிப்பாக, புதிய முனைய வாயில், முன்பதிவு மையம், நிலைய கட்டடம் அமைப்பது, நடைமேடை, வாகன நிறுத்தம், நடைபாதை, மின்தூக்கி, மின்படிக்கட்டு, நடைமேம்பாலம் ஆகியவைகளை மேம்படுத்துவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பொது அறிவிப்பு மையம், சிசிடிவி கேமரா அமைக்கப்படுகின்றன.

தற்போது பயணிகள் சாலையை எளிதாக அடையும் வகையில் நடைபாதை அமைப்பது, மின்தூக்கி அமைப்பது, பழைய கட்டடங்களை மறுசீரமைப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஒட்டுமொத்தமாக சுமாா் 60 சதவீத பணிகள் தற்போது வரை முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகளை அக்.31-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.