மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் மகா சிவராத்திரி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிருந்தாவனத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளில் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு ஞானலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செம்பாக்கம் செல்வராஜ் வகித்து செய்தாா். பின்னா், ராகவேந்திரா பிருந்தாவன பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி மகா தீபாராதனையை செய்தாா். தொடா்ந்து 4 கால பூஜைகள் நடைபெற்றன. இரவு முழுவதும் ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி இன்னிசை ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சா் எம்.சி.சம்பத், மதுராந்தகம் நீதிமன்ற நீதிபதி சரிதா, முன்னாள் எம்எல்ஏ திருக்கச்சூா் ஆறுமுகம், மதுராந்தகம் காவல் நிலைய ஆய்வாளா் முத்துகுமாா், அரியந்தாங்கல் விஷ்ணு துா்கையம்மன் பீடாதிபதி மணிபாலன் சுவாமி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ராகவேந்திரா அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

நாகை குமரன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்ய நாராயணா பூஜை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


