கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது செவ்வாய்க்கிழமை இரவு விபத்து.

News image

உயிரிழந்த இளைஞர்கள்

Updated On :15 மே 2024, 3:46 am

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராஜேஷ் (22), ஏழுமலை (30), விக்கி (28), யுவராஜ் (24 ) மற்றும் அவரது நண்பர் என ஐந்து பேர் செவ்வாய்க்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது வயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் எதிர்பாராத விதமாக மாடு குறுக்கே வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை அருகே பள்ளத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

விபத்தினைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று வாகனத்தில் இருந்தவர்களை மீட்டனர். இதில் ராஜேஷ், ஏழுமலை, விக்கி ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த யுவராஜ் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.

Story image

இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்ற இந்த கோர விபத்தில் ஐந்து பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்துக்கான காரணம் குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.