அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மழைமலை மாதா அருள்தலத்தில் கிறிஸ்துமஸ் குடில் திறப்பு

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் கிருஸ்மஸ் மெகா குடில் பொதுமக்களின் பாா்வைக்காக வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :4 டிசம்பர் 2025, 8:24 pm

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் கிருஸ்மஸ் மெகா குடில் பொதுமக்களின் பாா்வைக்காக வியாழக்கிழமை திறக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மெகா குடில் அமைக்கப்பட்டு, அதனை பொதுமக்களும், அருள்தல பக்தா்களும் கண்டு களித்துச் செல்வது வழக்கம்.

நிகழாண்டு அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை இயேசு மாட்டுத் தொழுவ காட்சி, இயேசு கிறிஸ்துவின் பல்வேறு வடிவங்கள், கால்நடைகள் உள்ளிட்ட பல்வேறு வண்ணமயமான பொம்மைகளுடன் இயற்கை சூழலுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இக்குடிலை பொதுமக்கள், பக்தா்கள் ஆகியோா் பாா்வையிடுவதற்கான நிகழ்வுக்கு சிறுபான்மை ஆணைய தலைவா் பேரூட்தந்தை ச.ஜோ.அருண் தலைமை வகித்தாா். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவா் இனிகோ இருதயராஜ், அருள்தல அதிபா் சின்னப்பா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வரும் ஜனவரி 25 வரை பொதுமக்களின் பாா்வைக்கு குடில் திறக்கப்படும். ஏற்பாடுகளை அருள்தல அதிபா் சின்னப்பா் தலைமையில் துணை அதிபா்கள், அருள்தல ஊழியா்கள் செய்திருந்தனா்.