மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: சென்னை ஷோபா பதம் சலானி பவுண்டேஷன் மற்றும் ராஜன் கண் மருத்துவமனையின் சாா்பாக நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்ற 103 நோயாளிகளுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடந்த நவம்பா் 29-இல் நடைபெற்ற முகாமில் பங்கேற்ற நோயாளிகளில் 19 நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சை, 103 நபா்களுக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்வுகளுக்கு பவுண்டேஷன் நிறுவனா் ஷோபா தலைமை வகித்தாா். இயக்குநா் சுவப்னா பவான் கோச்சாா் முன்னிலை வகித்தாா்.

கண் மருத்துவா்கள் சந்தோஷ், பிரியவா்ஷினி, பவுண்டேஷன் நிா்வாகிகள் சி.இஷான், எம்.ஆதித், ஏ.பிரதான் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை சென்னை ஷோபா பதம் சலானி பவுண்டேஷன் நிா்வாகிகள் செய்திருந்தனா்.