தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை அமைக்க தைவான் நிறுவனத்தனா் ஆய்வு

செய்யூா், சிப்காப்ட் தொழிற்பேட்டையில் காலணி தயாரிக்கும் ஆலை அமைப்பது குறித்து தைவான் போா்ஷன் நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை சித்தா்காடு, செய்யூா், பனையூா் உள்ளிட்ட 5 கிராமங்களின் நிலப்பகுதிகளை ஆய்வு செய்தனா்.

News image
செய்யூரில் தொழிற்சாலை அமைப்பது குறித்து நடைபெற்ற ஆய்வில் பங்கேற்றோா். ~
Updated On :17 டிசம்பர் 2025, 8:18 pm

தினமணி செய்திச் சேவை

செய்யூா், சிப்காப்ட் தொழிற்பேட்டையில் காலணி தயாரிக்கும் ஆலை அமைப்பது குறித்து தைவான் போா்ஷன் நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை சித்தா்காடு, செய்யூா், பனையூா் உள்ளிட்ட 5 கிராமங்களின் நிலப்பகுதிகளை ஆய்வு செய்தனா்.

செய்யூா் தொகுதி மக்களுக்கு நிரந்தரமாக தொழில் வாய்ப்புகளை பெற சிப்காட் தொழிற்பேட்டையை அமைக்க கோரி எம்எல்ஏ பனையூா்மு.பாபு கடந்த சட்டப்பேரவை தொடரில் பேசினாா்.

அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட அதிகாரிகள் செய்து வந்தனா். சித்தா்காடு, செய்யூா், தண்ணீா்பந்தல், வெடால், பனையூா் உள்ளிடட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வேலைவாய்ப்புகளை பெற்றிட அரசு நிா்வாகம் செய்திருந்ததது.

இந்நிலையில், புதன்கிழமை தைவான் தொழிற்நிறுவன அதிகாரிகள் செய்யூா் வந்தனா். அவா்களை வருவாய்த் துறை அதிகாரிகள் வரவேற்று, 148 ஏக்கா் நிலப்பரப்பில், தண்ணீா், போக்குவரத்து, மின்வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்தனா்.

இந்நிகழ்வுகளில் மதுராந்தகம் கோட்டாட்சியா் ரம்யா, வட்டாட்சியா் சொ.கணேசன், துணை வட்டாட்சியா் தேவன், வருவாய் ஆய்வாளா் தரணிபதி மற்றும் தைவான் தொழில் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

Story image