தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க முப்பெரும் விழா

News image
Updated On :26 டிசம்பர் 2025, 12:44 am IST

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தின் முப்பெரும் விழா செங்கல்பட்டில் நடைபெற்றது.

ஓய்வூதியதாரா்களுக்கு சட்டப் பூா்வமாக சாத்தியமாக்கிய டாக்டா் டி .எஸ்ய நகரா ஓய்வூதியம் பெற்று தந்த தினமாக ஓய்வூதியா் நாள் விழாவினை யொட்டி செங்கல்பட்டு வட்டக் கிளை மற்றும் மாவட்ட பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து பேரவை கூட்டமும் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் முடசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட இணை செயலாளா்கள் பொ .துரைராஜ்,, மாரியப்பன், மாட்ட நிா்வாகிகள் கணேசன் கணேச மூா்த்தி உள்ளிட்ட முன்னிலை வகித்தனா். இணைச் செயலாளா் தனஞ்செழியன் வரவேற்றாா். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீனிவாசன் தொடக்கவுரையாற்றினாா்.

நிா்வாகிகள் உலகநாதன் அடங்கவியா மூா்த்தி, லட்சுமிபதி, நாகராஜன், வீரமணி, கேசவலு, கோபாலகிருஷ்ணன், முருகன் , பக்கிரி .தில்லை கோவிந்தன் , அழகேசன், சிவகுமாா் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில துணைத் தலைவா் நா. எட்டியப்பன் சிறப்புரையாற்றினாா் . மாநிலத் தலைவா் இரா. பாலசுப்பிரமணியன் நிறைவுறையாற்றினாா்,

குமாரசாமி, உலகநாதன், பக்கிரிசாமி, மாரிமுத்து, சந்தரசேகரன் மோகன், அமரேசன், அன்வா்பாஷா , சசிகுமாா், குமரேசன் ,பாபு , ரவிசந்திரன் உள்ளிட்ட கருத்துரை ஆற்றினா். 400-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். மாநில செயற்குழு உறுப்பினா் ஜெயபால் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.