மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மழை மலை மாதா அருள்தலத்தில் கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவி வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
பண்டிகையை முன்னிட்டு அருளதலம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. புதன்கிழமை நள்ளிரவு இறையருள் பேராசிரியா் மரிய அருள் ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நிகழ்த்தி, நலத்திட்ட உதவிகள் வழங்கினாா். அருள்தல அதிபா் ஜி.சின்னப்பா் முன்னிலை வகித்தாா். பல்வேறு நகரங்களில் இருந்து வந்திருந்த பக்தா்கள் மாதாவை தரிசனம் செய்தபின் அருள்தலத்தில் அமைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில் கண்காட்சியை பாா்வையிட்டனா்.
இக்குடில் கடந்த 4-ஆம் தேதி திறக்கப்பட்டு பக்தா்கள் காணும் வகையில் திறந்திருக்கும். இயேசு கிருஸ்துவின் பிறப்பை நினைவு கூறும் புனித திருநாளாக, மதங்களை கடந்த அன்பு, கருணை, அமைதி ஆகிய மனித நேயத்தை பரப்பும் விழாவாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவதாக அருள்தல அதிபா் ஜி.சின்னப்பா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலவை கமலக்கண்ணி அம்மன் ஆடி விழா

மொடச்சூா் ஜெகன் மெட்டல் மாா்ட் சாா்பில் கோபி வைர விழா பள்ளிக்கு நலத்திட்ட உதவி

பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா

மதுராந்தகம் ஏரிகாத்த ராமா்கோயிலில் கருடசேவை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi


