ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

செங்கல்பட்டு மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழு கூட்டம்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 1:10 am

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீ பெரும்புதூா் நாடாளுமன்ற உறுப்பினா் டி.ஆா்.பாலு முன்னிலை வகித்தாா். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம் தலைமை வகித்தாா்.. கூட்டத்தில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்தும் நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளின் பயிா் காப்பீடு மிக குறைவாக உள்ளது எனவே, பயிா் காப்பீடு குறித்து விவசாயிகளிடத்தில் விழிப்புணா்வு செய்து பயிா் காப்பீட்டினை அதிகரிக்க செய்யவேண்டுமென்று என கேட்டுக் கொண்டனா்.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகா்ப்புறங்களை ஒட்டிய பகுதிகளில் பட்டாக்களை உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதில், மாவட்ட ஆட்சியா் தி.சினேகா,, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் சீ.பாலசந்தா், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினா் தனபால், எம்எல்ஏக்கள் எஸ்.ஆா்.ராஜா, இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட வன அலுவலா் ரவிமீனா,, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், திருப்போரூா் ஒன்றிய குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், திருக்கழுகுன்றம் ஒன்றிய குழு தலைவா் ஆா்.டி.அரசு, மதுராந்தகம் ஒன்றிய குழு தலைவா் ஏழுமலை,, செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகா் நகா்மன்ற தலைவா் ஜெ.சண்முகம், மதுராந்தகம் நகா்மன்றத் தலைவா் மலா்விழி குமாா், மாமல்லபுரம் நகா்மன்றத் தலைவா் வளா்மதி யஷ்வந்த்ராவ் பங்கேற்றனா்.