செங்கல்பட்டு
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் பந்தக்கால் நடும் விழா
திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைபெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிகழாண்டில் நடைபெறவுள்ள சித்திரை பெருவிழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகளுடன் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில், கோயில் செயல் அலுவலா் புவியரசு, மேலாளா் விஜயன் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், சிவாச்சாரியாா்கள் மற்றும் விழாக் குழுவினா், பக்தா்கள் கலந்து கொண்டனா்.